Saturday, August 22, 2009

தமிழ் தேசியம் வாழ்க வாழ்கவே!!

தமிழன் இல்லாத நாடே இல்லை
ஆணால்
தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை


























earipudur village

எம் அன்புக்குரிய தமிழ் மக்களே ! உங்களுக்கு தமிழ் தேசிய படையின் உள்ளம் கனிந்த

வணக்கம்!! வணக்கம்!! வணக்கம்!!

நாம் தற்பொழுது காணப்போவது வேடிக்கை விநோதமோ பொழுதுபோக்கு அம்சமோ விளையாட்டோ அல்ல. இது
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சத்தை தட்டிப்பர்க்கும் சிகப்பு சரித்திரம். எம் தொல்ப்புல்கொடி உறவுகளின் அடிமை சாசனம் வன்னி காட்டு குரிவிகளின் கூக்குரல் பனைமரம் பதுக்குகுழி என அறை நூற்றாண்டுகளின் ரத்ததூறல், தேசிய இனப்புரச்சிஇன் விடுதலை சரித்திரம் பத்துகோடி உலக தமிழரின் ஏக்கம் எம் புதிய தமிழ் தேசத்திர்க்கான.

கடைபுடச்சி! கடைபுரச்சி!! கடைபுரச்சி!!!

அன்புக்குரிய தமிழ் மக்களே, தம்பி தங்கை அக்கா அண்ணா உறவுகளே

யாம் கூற விழைவது எம் ஈழ போராட்டத்தைத்தான் இது என்ன பழயகதைதானே என படிக்காமல் விட்டுவிடாதீர். இது பழையகதை அல்ல தொடங்கவிருக்கும் புதிய தேசத்திற்கான விடிவெள்ளி, அடுத்த கட்டத்தை எட்டி உள்ள தமிழினத்தின் புரச்சி, அறை நூற்றாண்டு காலமாக வாடி அழிந்துவரும் எம் தமிழினத்தின் போராட்டம்.
நாமும் மனிதசங்கிலி உண்ணாவிரதம் ஊர்வலம் போதுக்குட்டம் போராட்டம் என அனைத்தையும் செய்துவிட்டோம் ஏன் 18 பேர் தீக்குளித்து நமது இன்னுஇர் கூட இழந்தோம், அனால் அதில் எதுவும் நடந்து விடவில்லை, மடியப்பிரந்தவந்தானே தமிழன் மடியட்டுமே என நினைத்துவிட்டாரோ என்னமோ, ''மாவீரன்'' முத்துகுமார் இட்ட தீ இன்று ஐநா சபைவரை பரவயுள்ளது
சர்வதேச சமுகத்தை திரும்பிப்பார்க்க வைத்துஉள்ளது. என்னதான் நாம் உச்சகட்ட போராட்டம் நடத்தினாலு நமது போராட்டம் ஒரு அளவுக்கு மேல் தமிழ் நாட்டை விட்டு கேட்பதே இல்லை.

இட்லர் முசோலினி என இதுவரை பார்கண்டிராத கொடுமைக்கெல்லாம் உச்சகட்டம் தான் ராஜபக்சேவின் தமிழின அழிப்புகொல்கை, போர்க்களத்தில் ஊடகங்கலை மருத்துவ உதவி மற்றும் செஞ்சுளுவைசங்க்களை எல்லாம் வெளியேற்றிய போதே நாம் இதை உணர்ந்திருக்க வேண்டும், நமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நாயகனாக சித்தரித்து செய்திவேளிஇட்டுவரும் பல வூடகங்கள் அவரின் போராட்டகலங்களில், சிங்கள முகாம்களுக்கே அதரவாக செயல்பட்டன என்பதே உண்மை, வூடகங்கள் ஒருபுறம் இருக்க நமது தமிழக அரசியல்வாதிகளை நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும்போல்வுள்ளது, அறை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆட்சிசெய்துவரும் திராவிட கட்சிகள் தமிழருக்க்காகவும் தமிழினத்திற்காகவும் ஒன்றும் செய்துவிடவில்லை, தமிழகத்தின் முக்கிய கட்சிகளாக விளங்கும் தி மு க , ஆ தி மு க , இரண்டுமே உழுக்கு உதவாதமடுகள், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழின அழிப்பு யுத்தத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் அதறித்துவருபவை, இந்த நேரத்தில் ஒரு கவிதை ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்,

பொங்கலுக்கு பொங்கல் காலையோட கொம்புக்கு கருப்பு சிவப்பு அடிப்பாரு சித்தப்பா !

கருப்பு வெல்ல சிவப்பா அடிப்பாரு சித்தப்பா ,
உம்மாடு பெருசா எம்மாடு பெருசான்னு எப்பவும் சண்டையோ சண்டை ,

மீசைய முறுக்கிக்கிட்டு வந்த்தாறு தாத்தா,

ரெண்டுமே தவடுதன்னிய மண்டுதே வொழிய இடம் வலமா ஏருக்கும் லாயக்கி இல்ல வண்டி இழுக்கவும் இலக்கிஇள்ள,

வேலைக்காகத மாட்டை வச்சிக்கிட்டு வேட்டிபெச்சென்னட வெட்டிபேச்சு,

காரு இல்லன்னாலும் பரவல்ல ஓசிக்கு வச்சசிக்கொங்னு அறுப்புகாரந்கிட்ட அவுத்து கொடுத்துட்டாரு மாட்ட,

சினியன் ஒழிஞ்சா சரி கட்டுத்தறி விடிஞ்சா சரி,

கோடியக்கரயை கிழிக்கிறது குண்டடிசத்தம் அங்கே இறந்து கடக்கும் தமிழ் குழந்தைமீது ஏறிசெல்லும் புத்தபிட்ச்சுகளுக்கும் எங்க ஊர் காங்கரஸ் காரங்களுக்கும் ஒரே முக ஜாடை !!!!.
நன்றி தமிழர் கண்ணோட்டம்.......

இதுபோன்று ஜெயலலிதாவோ தமிழ் இன விரோத வார்த்தைகளை பல ஆண்டுகளாகவே உதிர்துவருகிறார் எம் கி ஆர் . உயிருடன் இருந்திடுந்தால் கூட இதை எல்லாம் பொறுத்திருக்க மாட்டார். விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு முதல் ஆயுத கொள்முதலுக்கான இரண்டு கோடி பணத்தை கொடுத்ததே எம் ஜி ஆர் தான் எனபது அனைவருக்கும் தெரியும் ஆதாரம்; www.tamil.net prabakaran history. போராளிகளின் வழி தவறானதாக இருந்து இருந்தால் அவர் அந்த உதவியை செய்திருக்கமாட்டார். ஜெயலலிதாவையாவது மன்னித்துவிடலாம் ஆனால் இந்த கருணாநிதியோ
சோனியா கந்திஇன் கைப்பாவையாக மாறி இன்று தமிழினத்தை அழித்தொழித்துள்ளனர் தமிழையும் தமிழரும் யாராலும் அழிக்கமுடியாது, பிரபாகரன் இல்லாத தீர்வு சோனியா அரசின் சதித்திட்டம் புலிகள் ஒடுக்கல்பட்டால் தமிழீழம் கனவு தகர்ந்துவிடும் எனபது இவர்களின் சூழ்சி. விடுதலை புலிகள் தங்கள் ஆயுதங்களை மவுனமக்கயுள்ளதால் ஈழ போராட்டம் நின்றுவிடாது ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஒரு படிப்பினையை ஏற்ப்படுத்துகிறது.
அன்புக்குரிய தமிழ் தோழர்களே நன்றாக சிந்தித்துபாருங்கள்;-
நமக்கும் அக்கா தங்கயர்கள் அனைவரும் உள்ளனர், கொதபை ராஜபக்சே ராணுவத்திற்கு கூரிஇருப்பது என்ன தெரியுமா தமிழரில் ஆண்கள் கடலுக்க பெண்கள் உங்களுக்கு என்று கூரியோல்லான் இதன் அடிப்படைகள் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறுவுக்கு உர்ப்படுத்த்ப்பட்டு கற்பழிக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை ஆயிரம் தமிழ் குடும்பங்கள் தங்கள் உறவுகள் விட்டிவிட்டு நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாடு சென்றிருப்பார்கள். சொந்த நாட்டில் அகதிகளாக வழும் நிலை இலங்கையை விட்டால் வேறு எந்த நாட்டிலும் கண்டிராத கொடுமை. இதைவிட எத்தனையோ பல கொடுமைகள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது,

பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் வாங்கரும்புளி ரூபன் கட்டுனயக்கே விமானதலத்தின்மீது தாக்குதல் நடத்தி வீரச்சவேதினார். அவரின் கடிதத்தை நினைவு படுத்தவிரும்புகிறேன் ,
{If we dont fight for our freedam who else will} நமது தமிழ் இனத்திற்காக நாம் போராடாவிட்டால் யார் போராடுவார்கள் என்று குறிப்பிடுகிறார், எத்தனையோ ஆயிரம் முகம் தெரியா போராளிகள் நம் தமிழினத்திற்காக தங்கள் இன்னுஇர் நீர்த்துள்ளனர் அவர்களெல்லாம் பிறக்கும்போதே போராளிகளாக பிறந்தார்களா இல்லை, நமது தமிழினத்தின் விடுதலை போராட்டம் சிங்களவர்களாலேயே பணியப்பட்டது ஈழ தமிழர் வேறல்ல இந்திய தமிழர்கள் வேறல்ல அனைவரும் தமிழ் தாயின் குழந்தைகளே அப்படி இருக்க நம் தமிழினத்திற்காக நம் என் போராடக்கூடாது, இந்திய அடிமை பட்டு இருந்த காலங்களில் பிறந்திருந்தால் நாமும் ஒரு சவர்கராகவோ பகத்சிங்காகவோ, சுபாஷ் சந்திரபோசாகவோ மாரிஇருப்போம். இப்போது நம் தமிழினத்தை காக்க ஆயுதம் ஏந்துவதில் என்ன தவறு? ஆணால் நாம் அப்படி செய்யவில்லை, அறவழியிலேயே போராடிவருகிறோம், இனி வரும் காலங்களிலும் அறவழியிலே போராடுவோம். அகீம்சை என்று தோற்று போவதில்லை, வெல்க தமிழ் !!



தமிழீழம் என்பதைவிட தற்பொழுது ஈழத்தமிழர்கள் அடைத்துவிக்கப்பட்டுள்ள முள்வேலிகளில் இருந்தாவது அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் அங்கு தனிநாடு பெறவில்லை என்றாலும் சமுரிமவுரிமையுடனும், மகிழ்ச்ச்யுடனும் வாழ நம்மால் ஆன உதவிகளை செய்வோம் !!! அழிந்து வரும் தமிழினத்தை காப்போம்!!

தினகரன்
tamilnationforce@gmail.com
dina.tamil@gmail.com
+91+9036400925
+91+9742347466

புதிய தேசத்துக்கான கடை புரச்சி வானத்தில் வான்படை வானவேடிக்கை போட்டுகட்டுகிறது.....

வன்படை பறவை பறக்க தொடங்கியதும் வன்னி காட்டு குருவிகள் துப்பாக்கி தூக்க பயிற்சி எடுக்கிறது. வான் படை வேகத்திற்கு கொருவிகளும் பறந்துபோய் எதிரியை தாக்க............

ஈழ மண்ணில் ஈழ மண்ணில்
மண்ணில் முளைக்கும் செடி கொடிகலேலாம் எம் போராளிகள் இதயத்தில் இருந்தே முளைத்துவருகிறது, எப்பொழுது விடுதலை ? மண்ணை நோக்கி...........

அறை மண்ணை நோக்கி நுற்றாண்டு இரத்த தூரலிலில் நனைந்த மண் விரைவில் விடுதலை விழாவில் ஆயிரம் பூக்களை புன்னகையோடு பிரவேசம் செய்யப்போகிறது !!!


வான்படை இனி எதிரியை வீழ்த்தாது மேகத்தை முட்டும் வெள்ளி மழை -ஈழத்தில் கொட்டட்டும் ...

ஈழ மக்கள் அழுகினால் உப்பு நீராய் இருந்த கடல் -இனி உன்னுநீறாய் மாறும் ....
வெடிகுண்டு சத்தத்தில் பயந்துகிடந்த மீன்கள் கூட்டம் இனி துள்ளி குதித்து ஓடும்.......
அலையில் பிணமாய் மிதந்த தமிழன்-இனி அழ்கடளிளில் படகுசெளுத்துவான்...........

பனைமரம் பதுங்குகுழி அணிந்த ஆடை, ஆயுதகவசம் நினைவுச்சின்னமாய் மாறும் மண்ணுக்குள் மடிந்த போராளிகளின் கல்லறை வணக்கும் ஆலயமாகும்...........

இந்திய முகம் சுழிக்கும் இலங்கை வெறும் சுழி ஆகும் .......
எல்ல நாடுகளும் கைத்தட்டும் இணைவில் கொடிபறக்கும் ............

இனி புதிய தகவலோடு அடுத்த "தேசிய இன புரச்சி " பக்கத்து ஊரில் நாளை ............!!


நன்றி தமிழர் கண்ணோட்டம்

தமிழீழ கவிதைகள் { ஈழத்தாய் }

ழதாயே உன்னை பலர் கனவேன்றார்கள் !
கடவுளையே கள்ளென்னும் இவ்வீனர்களே மன்னித்தாய் !!
என் தாயே உன்னை மாயை என்றார்கள் மடஎர்கள் !
மிதித்தாரை பொறுக்கும் பூமித்தாயக பொருத்தாய் !!
ஈழம் இல்லை என்றான் ஈனன், உன்னை !
மீட்டெடுத் போராளிகள் இன்று மண்ணுக்குள் ,
தாயே போருத்தாயே அழித்தாலும் அளித்தாயே !
பார் இந்த பார் இன்று ஊமையானது !!
ழாழ் என்னும் ய்ழாழ்பனத்தை தலையாய் கொண்டவலே !
என்னிசைத்தாயே இனிஎசைதாயே உன்னை !
உன்னை தலைவனக்குகிறேன் .

போராளி
கள்

இங்கு விதிக்கப்பட்டது விதைநெல் அல்ல
எங்கள் போராளிகள் தான் !

ஈழத்தில் உறுதியாய் உள்ளவை பாறைகள் அல்ல
எங்கள் போராளிகளின் நம்பிக்கை !!

பாரெல்லாம் மலர்வது மலர்கள் அல்ல
தமிழ்மக்களின் விடுதலை பொறி !!

இங்கு வெடித்துசிதறுவது எரிமலை அல்ல
தமிழினத்தின் விடுதலை வேட்கை !!

விடுதலை

அறைநூற்றண்டுகள் ரத்தில் நினைந்த மண்
விரைவில் விடுதலை விண்ணைநோக்கி !

கொடியக்கரையை கிழிக்கிறது குண்டடிசத்தம்
முளைப்பார்கள் புதைந்த போராளிகள் !!

இமயம் இடிந்துபோக கதிரவன் கரைந்துபோக
வெல்லட்டும் ஈழம் விடிவெள்ளியாய் !

அழிந்தார்கலம் தமிழர்கள் வோழிந்த்தார்கலம் போராளிகள்
அங்குமுளைக்கும் செடிகொடிஎல்லாம் போராளிகளே !!

தமிழினத்தின் விடுதலை தரணியில் மலரும்
கல்லறைகள் கோவில்கள் ஆகும் !!

குருதியில் கொப்பளித்த் ஈழமன் ஒடுக்கப்பட்ட
தமிழினம் விரைவில் விடுதலை !!

விடுதலை நம்கையில் அறியா தமிழனே
இன்றே புறப்பட்டு போராட !!

வரலரரி நாடுகளே தியாகம்அறிய தலைவர்களே
உமக்கு புரியாது தமிழர்விடுதலை !!

ஒடுக்கினால் ஓயாது அடக்கினால் அழியாது
எங்கள் தமிழர் போராட்டம் !!

போராட்டம் என்றல் புரியுமா தியாகமேன்றல் தெர்யுமா
வாருங்கள் கற்க தமிழரிடம் !!

Sunday, August 16, 2009

தென் அப்ரிகாவில் விடுதலைபுலிகள் இலக்கை ராணுவம் அதிர்ச்சி

புலிகளை முற்றிலுமாக வோழித்து விட்டதாகவும் தமிழீழ போராட்டம் இனி தலை தூக்காது என இலங்கை ராணுவம் கூறிவரும் நிலையில் விடுதலை புலிகள் பலமிழந்துவிடவில்லை எனும் செய்தி இன்று வெளியாகி உள்ளது. விடுதலை புலிகளிடம் 15 க்கும் மேற்ப்பட்ட இலகுரக விமானக்கள் இருந்தது நாம் அனைவரும் அறிவோம், ஆணால் விடுதலை புலிகளுடனான கடைசி போரில் புலிகளை முற்றிலுமாக வோழித்துவிட்டதாக பிதற்றிக்கொண்ட இலங்கை அரசு அவர்களின் விமா வொடுதலைத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு விமானக்கள் என்ன ஆனது என்ற தகவலை கூரவேஇல்லை அவர்களின் பொய்பித்தலாட்டம் இன்று அனைவருக்கும் தெரிந்துவுள்ளது,

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக விமானங்கள் கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மலேசியாவில் இருந்து அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் செல்வராஜா பத்மநாதனை, விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

"
எரித்திரியாவுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையேயான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன.இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 10 சிறியரக விமானங்கள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் வானூர்தி நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், எரித்திய நாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் வர்த்தக நிறுனம் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 வானூர்திகளும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த விமானங்ககளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன்படி எரித்திரிய வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றே நிர்வகித்து வருகின்றது என்ற செய்தி சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகுந்த அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? : இலங்கை ராணுவத்தினர் அதிர்ச்சி

விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை அறிந்து இலங்னை ராணுவத்தினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கைப் போரில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள வன்னி மற்றும் யேலா காட்டுப்பகுதிகளில் புலிகள் சிலர் மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கொழும்பு பிரபாவை ராணுவம் கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், கொழும்பு வெள்ளவத்தையில் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு ராணுவம் விரைந்தது. ஆனால் அதற்குள்ளாக புலிகள் அங்கிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம், புலிகளின் உளவுப்பிரிவு, கொழும்பு நகரில் தொடர்ந்து பலம் மிக்கதாக செயல்பட்டுவருவது நிரூபணமாகி உள்ளது.
இதனிடையே, புலிகளின் வாக்கி டாக்கியை இலங்கை ராணுவத்தினர் அண்மையில் இடைமறித்துக் கேட்டபோது, ரகசிய மொழியில் பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது. இது பொட்டு அம்மானை அல்லது சொர்ணத்தைக் குறிக்கும் செய்தி என்பது ராணுவத்தினருக்கு தெரியவந்துள்ளதால், தற்போது அவர்கள் மிகவும் கலக்கத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.



லெமூரியா உண்மையா பொய்யா

தோழர்களே அது முற்று முழுதான உண்மையே ஏனென்றால் 1965 ஆம் ஆண்டு அமெரிக்க கப்பல் கடல் அரச்சியல் ஈடுபட்டபொழுதுதான் கடலுக்குள் மலைகள் இருப்பது தெரியவந்தது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது வுள்ள அனைத்து கண்டங்களும் ஒன்றாக இருந்தது என்பதை அனைதுஉலக புவியல் ஆய்வாளர்களின் கருத்து அவ்வகில் பார்த்தால் பொதிகைமலை கடலுக்கு அடியில் உள்ளது எனபது நம் அனைவரும் அறிந்ததே மற்றும் தென் அப்ரிக்காவில் வாழும் பழங்குடியினர் தங்கள் பட்டியை பாட்டி என்றே அழைக்கின்றனர் மற்றும் அவர்கள் வேட்டை ஆட பயன்படுத்தும் ஆயுதங்களும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய, தற்ப்பொழுது ஊட்டி போன்ற மலை பகுதியில் வாழும் மக்கள் பயன்படுத்தும் ஆயுதமும் ஒரே வகையாக உள்ளது, மற்றும் நமது பழங்குடினர் இசை ஆஸ்திரேலிய பழங்குடிஇனரும் ஒத்துபோகிறது எனவே லேமுரிய இருந்தது

உண்மையே! உண்மையே!! உண்மையே !!!

Thursday, August 13, 2009

சதிகளை முறியடிப்போம்

சதிகளை முறியடிப்போம் தலைவர் காட்டிய பாதையில் தமிழீழத்தை மீட்டெடுப்போம், என்பதே செல்வராசா பத்மநாதன் கேபி அண்ணரின் கனவு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் கூட்டுச்சதியினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்துசமூத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடொன்றின் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பங்களிப்புடன் வெகுநாட்களாக திட்டமிடப்பட்டே இந்த கடத்தல் இடம்பெற்றிருப்பதாகவும் அறியவருகிறது. இது நாடு கடந்த இலைங்கை அரசின் ரவுடி தனத்தை கட்டுகிறது தலைவர் நலமாக உள்ளார் நம்புங்கள் தமிழீழம் மலர்ந்தே தீரும்

தமிழரசன் . ரா
தமிழ் தேசிய படை

Saturday, August 1, 2009

எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.

எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 03:32 பி.ப]

"வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
"கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரம் மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாக காயமடைந்த 25 ஆயிரம் பேர் மருத்துவ பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் அங்குள்ளார்கள். எமது மக்களைப் பாதுகாப்பதே இப்போதுள்ள அவசரமான பணியாகும்" எனவும் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அவசர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"இதனைக் கவனத்திற்கொண்டு எமது மக்களைப் பாதுகாப்பதற்காக எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்" எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:
"சிறிலங்காவின் ஆயுதப் படையினரால் எமது மக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு உலகத்தில் உள்ள நாடுகளை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.
போர் இடம்பெறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எமது மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எமக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாம் பின்வாங்க வேண்டியேற்பட்டது.
எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது கடந்த மூன்று தசாப்த காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்டு, இந்தத் தீவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வை நாடியது.
2007 ஆம் ஆண்டில் போர் தீவிரமடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்திருக்கின்றனர். வடபகுதியில் இராணுவம் தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதையடுத்து பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையாலும் மேலும் பலர் மரணமடைந்திருக்கின்றனர்.
"இந்தக் கொடூர நிகழ்வுகளை நிறுத்துவதற்கு எமது வரையறைக்கு உட்பட்ட எதனையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது எமது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதுடன், சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருக்கின்றோம்.
இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும்.
எமது மக்களுக்காகத்தான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை."
இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் கவிதைகள்

வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....

முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.

நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.

மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்

கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.

புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்

இளமாறன் . வெ

(தமிழ் தேசிய படை )