வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....
முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.
நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.
மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்
கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.
புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்
இளமாறன் . வெ
(தமிழ் தேசிய படை )
No comments:
Post a Comment